இடமில்லை… தவிக்கும் தாம்பரம் ஆர்.டி.ஓ.ஆபிஸ்!


தாம்பரம் வட்டார போக்கு வரத்து அலுவலகம், தற்போது தாம்பரம் பழைய ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு வாகன பதிவுகள் , ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இங்கு வரும் பொதுமக்களை அமர வைப்பதற்கு தேவையான இடவசதி இல்லாததால் இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும் இடவசதி போதாததால் பணிகள் நடைபெறுவதில் சிரமம் இருக்கிறது. இந்த இடம் எப்போதும் ஜனநெருக்கடியில் இருப்பதால் கட்டிட உரிமையாளர் காலி செய்யுமாறு கூறிவிட்டாராம். இதனால் ஆர்.டி.ஓ. அலுவகத்தை வேறு இடத்திற்கு மாற்ற மூன்று ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். ஆனால்; இதுவரை பணிதொடங்கப்பட வில்லை. அதற்கு காரணம் வருவாய் துறையினர்தானாம். அவர்கள் இடத்தை தேர்வு செய்து தராமல் இழுத்தடிக்கிறார்களாம். இடம் தயாரானால், மாறுவதில் பிரச்னை இருக்காது என்கின்றனர் ஆர்.டி.ஓ. அலுவலர்கள்.
ஏன் சார் இப்படி பண்றீங்க? இடத்தை பார்த்து கொடுங்க.. என்ற குரல் தாம்பரம் வருவாய் துறையை நோக்கி கேட்கத் துவங்கி இருக்கிறது.

visit us @ www.sigappanada.com
-வரதன்
இடமில்லை… தவிக்கும் தாம்பரம் ஆர்.டி.ஓ.ஆபிஸ்! இடமில்லை… தவிக்கும் தாம்பரம் ஆர்.டி.ஓ.ஆபிஸ்! Reviewed by Unknown on 18:19 Rating: 5

No comments:

Powered by Blogger.